Sunday, November 29, 2009

மாணவர் சங்கம் கோரிக்கை

சமச்சீர் கல்வியை எதிர்க்கும் மெட்ரிக். பள்ளியை அரசுடமையாக்க மாணவர் சங்கம் கோரிக்கை


10 Sep 2009 05:42:00 AM தினமணி


திருவண்ணாமலை, செப்.9: சமச்சீர் கல்வியை எதிர்க்கும் மெட்ரிக். பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடந்த தமிழக மாணவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் நடந்த செயற்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கி. பாரிமோகன் சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர் ராமதாஸின் நீண்ட நாள் கோரிக்கையான சமச்சீர் கல்வியை நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்துள்ளது. அதை தடை செய்யக் கோரி அரசுக்கு எதிராக செயல்படும் மெட்ரிக். பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். தமிழர்களை அழிக்கும், இலங்கை அதிபரை சர்வதேச முதல் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment